மதுவிற்ற வாலிபர் கைது
சாத்தூர் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய செல்லப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த பாபு சரவணன் (வயது 31) என்பவரிடம் இருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.