ஒரே நாளில் 242 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-14 17:59 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,308 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 113 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்