2,506 பேருக்கு கொரோனா பரிசோதனை

2,506 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-15 19:29 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,485 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,021 பேருக்கும் என மொத்தம் 2,506 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 269 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 29 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 298 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 6,610-ம், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 450-ம் கையிருப்பில் உள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 821 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 50 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 871 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்