கொரோனா பாதித்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மரணம்

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Update: 2021-05-17 00:06 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.கவுஸ் பாஷா (வயது 60). சிங்கப்பெருமாள் கோவிலில் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுஸ்பாஷாவுக்கு மும்தாஜ் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்