காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-17 12:26 GMT
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் காயல்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர். கடற்கரை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர் காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் செய்யது முகைதீன் (வயது 32), என்பதும் அப்பகுதியில் அவர் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்