வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் முல்லை நகர் அங்கன்வாடியில் ஒலப்பாளையம் ஆரம்பசுகாதாரம் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கான கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், டாக்டர் சுதாமதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு முகாமிற்கு வந்தவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். பின்னர் காய்ச்சல், இருமல் ஏதேனும் அறிகுறி உள்ளதா என்றும் பரிசோதனை செய்து பார்த்தனர்.