காளையார்கோவிலில் அனுமதியின்றி நடந்த வாரச்சந்தை

காளையார்கோவிலில் அனுமதியின்றி வாரச்சந்தை நடந்தது. போலீசார் எச்சரித்து கலைந்து போக செய்தனர்.

Update: 2021-05-17 18:18 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த வாரம் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெற்றது. அப்போது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து சந்தை நிர்வாகம் சார்பில் இனி மறு அறிவிப்பு வரும் வரை வாரச்சந்தை நடைபெறாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வாரச்சந்தை தெப்பகுளம் தென்கரையிலுள்ள சாலையில் நடைபெற்றது. காய்கறிகளை வாங்க ஏராளமானோர் சமூக இடைவெளி இன்றி திரண்டிருந்தனர். கொரோனா தொற்று பரவும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காளையார்கோவில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் வந்து வியாபாரிகளையும் பொதுமக்களையும் எச்சரிக்கை செய்து கலைந்து போகச் செய்தனர்.

மேலும் செய்திகள்