வடவள்ளி
கோவை வடவள்ளி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரகேரளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் அங்கு கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா விற்றதாக வீரகேரளம் பாரதி தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.