தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-17 18:50 GMT
சிவகாசி,மே.
சிவகாசி நாரணாபுரம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகள் ராஜலட்சுமிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ராஜலட்சுமி வீட்டின் அறைக்குள் சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜலட்சுமியின் தாய் மகேஸ்வரி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்