முககவசம் அணியாத-சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத- சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-17 19:29 GMT
பெரம்பலூர், மே.18-
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் முககவசம் அணியாத 139 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.27 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 19 பேருக்கு தலா ரூ.500 வீதம் 9 ஆயிரத்து 500-ம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்