பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பாலமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.