பாலக்கோடு அருகே மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் - முதியவர் கைது

பாலக்கோடு அருகே மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-18 01:54 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பூனையன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி மனோகரன் (வயது 60). இவர் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணை கடந்த 5 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து நடந்த சம்பவத்தை அந்த பெண் தந்தையிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மனோகரனை கைது செய்தனர். இதையடுத்து அவர் தர்மபுரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்