மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி

மாதவரத்தில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

Update: 2021-05-18 04:59 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு பெரிய தெருவைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். அதே பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து உள்ளார். இவருடைய மகன் முகமது அசன் (வயது 17). இவர், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை கடையை சுத்தம் செய்து கொண்டிருந்த முகமது அசன், கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தையும் சுத்தம் செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி பலியானார். இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்