சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீர் சாவு
சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீரென இறந்தார்.
அரிமளம்,மே.19-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள விருதன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள விருதன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.