399 பேருக்கு கொரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 399 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 16,865 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 303 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 118 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 119- ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று பலரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 399 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17264-ஆக உயர்ந்துள்ளது.