மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு; மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-20 20:24 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன், அவரது உதவியாளருடன் கோடாலிகருப்பூர் கொள்ளிடக்கரையில் சென்றார். அப்போது அங்கு அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த கோடாலிகருப்பூர் மேட்டுத்தெருவை சேர்ந்த காளிமுத்து(வயது 51), ராஜா(35), சக்திவேல்(41) ஆகியோர், மாடுகளை அவிழ்த்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்