மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை

வடகாடு அருகே மணல் திருட்டை தடுக்க ஆற்றின் கரையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் குழி தோண்டப்பட்டுள்ளன.

Update: 2021-05-21 18:39 GMT
வடகாடு, மே.22-
வடகாடு அருகே மணல் திருட்டை தடுக்க ஆற்றின் கரையில்  வாகனங்கள் செல்ல முடியாத வகையில் குழி தோண்டப்பட்டுள்ளன.
மணல் குவியல்
வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி மற்றும் கறம்பக்குடி எல்லை பகுதியில் செல்லும் அக்னி ஆற்றுப்பகுதியில் இருந்து மணலை அள்ளி செல்ல ஏதுவாக, குவியல், குவியலாக வைத்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, வடகாடு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் உதவியுடன் அள்ளி ஆற்றுப்பகுதியில் நிரப்பினர்.
குழி தோண்டினர்
பின்னர் மணல் கடத்தல் லாரிகள் ஆற்றுக்குள் நுழையாத வகையில் ஆற்றங்கரையோரங்களில் பொக்லைன் எந்திர உதவியுடன் ஆழமாக குழி தோண்டியுள்ளனர். இதன் மூலம் ஆற்றுக்குள் மணல் லாரிகள் செல்வது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்..

மேலும் செய்திகள்