மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2021-05-21 21:00 GMT
சங்கரன்கோவில், மே:
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலவயலி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து மகன் சந்தனகுமார் (வயது 30), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்க செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தனகுமாருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆகிறது. இந்த நிலையில் அவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்