நெல்லையில் ஆட்டோக்கள் மூலம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

நெல்லையில் ஆட்டோக்கள் மூலம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-05-22 19:57 GMT
நெல்லை, மே:
நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் தினமும் ஆட்டோக்கள் மூலம் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாநகராட்சி, ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கபசுர குடிநீர் வழங்கும் வாகனங்களை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (குற்றம், போக்குவரத்து) மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், ரோட்டரி சங்க நிர்வாகி அயூப்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்