காரிமங்கலம் அருகே பெட்டிக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

காரிமங்கலம் அருகே பெட்டிக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-23 20:15 GMT
காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே சேசப்ப நாயுடு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65). இவர் பாலக்கோடு செல்லும் சாலையில் பெட்டிக்கடை வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சின்னசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்