தங்கச்சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

Update: 2021-05-23 20:33 GMT
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் கட்ட ராமன். இவரது மனைவி கருப்பாயி (வயது 65). இவர் கொங்கபட்டி கிராமத்தில் தனது வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்்சங்கலியை பறித்து சென்றனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்