அடையாளம் தெரியாத ஆண் பிணம்
காரியாபட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண்பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.
காரியாபட்டி,
காரியாபட்டி பிச்சம்பட்டி நான்குவழிச்சாலை அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலில் பேரில் காரியாபட்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.