மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா முழு ஊரடங்கையொட்டி, கணியூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தேவையின்றி, இரு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கணியூர் அருகே உள்ள காரத்தொழுவு, துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, கடத்தூர், போன்ற பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகின்றன. தேவையின்றி ஊர் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.