கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது

கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது

Update: 2021-05-25 16:54 GMT
கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, வினோத் குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பிள்ளை(வயது 40), மல்லிகைப்பாடி ஜெயச்சந்திரன்(30), வடக்கநந்தல் கருப்பன்(43), சேஷசமுத்திரம் செல்லமுத்து, கருப்புசாமி, மண்மலை கிராமத்தைச் சேர்ந்த கமலசேகர்(44) ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்