ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 420 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 4,369 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் காரணமாக 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.