திருப்புவனம் அருகே கானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தனியாக வாட்ஸ் அப் குழு தொடங்கி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக கபசுர குடிநீர், முட்டை, பயறு வகைகள், பல்வேறு வகையான சூப்கள் தயார் செய்து இலவசமாக வழங்கினர்