வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-26 20:03 GMT
சிவகிரி

சிவகிரி பள்ளிவாசல் அருகே வடக்கு ரத வீதி முதல் சந்தை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கணேசன் (வயது 23). கூலித் தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை முனியாண்டி கண்டித்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த கணேசன், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கணேசன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்