கள் விற்றவர் கைது

கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-27 14:27 GMT

தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அடுத்த கரட்டுப்பட்டி அருகே கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாடிக்கொம்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வி தலைமையில் போலீசார் கரட்டுப்பட்டிபிரிவு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னு (வயது 56) என்பவர் பனைமர கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


மேலும் செய்திகள்