செய்துங்கநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

செய்துங்கநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-27 14:29 GMT
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் சாவு
செய்துங்கநல்லூர் மேலதூதுகுழியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 75), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள்.  இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது இந்நிலையில் சில நாட்களாக அருணாச்சலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் இறந்து போனார்.
மனைவி தீக்குளிப்பு
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் முருகம்மாள் புலம்பியவாறு இருந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட முருகம்மாள் (58) வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். உடனடியாக செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் சம்பவ இடத்திற்கு சென்று தீக்காயத்துடன் இருந்த முருகம்மாளை மீீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
 இதுகுறித்துசெய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தீீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்