மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானார்.

Update: 2021-05-28 17:58 GMT
அறந்தாங்கி, மே.29-
அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி மடத்து குடியிருப்பை சேர்ந்தவர் ரவி (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் துணை மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அரசர்குளம் கீழ்பாதி ராமன் ஏரி அருகே உள்ள மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரவி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்