மூதாட்டி தீக்குளித்து சாவு

ஆழ்வார்குறிச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-05-28 19:46 GMT
கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த சீவலப்பேரியான் மனைவி வள்ளியம்மாள் (வயது 70). இவர் தனது மகன் வீட்டின் அருகே தனியே வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வள்ளியம்மாள் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் அருகில் உள்ள குளத்தில் இறங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் நேற்று இறந்தார். 

இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்