விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-05-29 18:31 GMT
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர் மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் காகிதபுரம் வல்லபை கணபதி கோவில், ஈ.ஐ.டி விநாயகர் கோவில் மற்றும் பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

மேலும் செய்திகள்