விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை பரிசோதித்து கொரோனா தடுப்பூசி

ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறி வெளியே வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்து, கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-29 21:47 GMT
ஜெயங்கொண்டம்:

வாகனங்களில் செல்கின்றனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவம் மற்றும் இறப்பு உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகரில் ஊரடங்கையொட்டி பல்வேறு சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தளர்வுகளில்லா முழு ஊரடங்கின் 6-வது நாளான நேற்றும் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பலர் தொடர்ந்து செல்லும் நிலை இருந்தது. போலீசார், வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வரும் பொதுமக்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டும், பொதுமக்கள் ெவளியே வருவதை நிறுத்தவில்லை. எனவே விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்