கோவில் குளத்தில் மூதாட்டி பிணம்

கோவில் குளத்தில் மூதாட்டி பிணம்.

Update: 2021-05-30 04:56 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சாரதா (வயது 75). குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சிவன் கோவில் குளத்தில் தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் சாரதா கிடைக்கவில்லை. மேலும் கோவில் குளத்தின் அருகே அவர் கொண்டு சென்ற குடம் மட்டும் இருந்தது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பூந்தமல்லி தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதாவை குளத்தில் இருந்து பிணமாக மீட்டனர். சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் கோவில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எவ்வாறு இறந்தார்? என்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்