ஆழ்வார்திருநகரியில் சூதாடிய 6 பேர் கைது

ஆழ்வார்திருநகரியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-30 15:05 GMT
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்வார்திருநகரி வாய்க்கால் படித்துறையில் பணம் வைத்து சூதாடியதாக, ஆழ்வார்திருநகரி ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம், சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்