கயத்தாறு அருகே பனங்கள் விற்றவர் கைது
கயத்தாறு அருகே பனங்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா, வடக்கு வாகைகுளம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கநாடார் மகன் கணேசன் (வயது 42). அவர் மானங்காத்தான், ஆத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பனங்கள் இறக்கி விற்பனை செய்து வந்தார். அவரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 240 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.