மணல் திருடியவருக்கு போலீசார் வலைவீச்சு
மாட்டுவண்டியில் மணல் திருடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப் பகுதியில் மணல் திருடி கொண்டிருந்த முத்துக்குமார் (வயது 53) என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய முத்துக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.