அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-30 18:57 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபுஜியிடம் கொரோனா சிகிச்சை வார்டில் எத்தனை படுக்கை வசதி உள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. எத்தனை நோயாளிகள் வருகிறார்கள். மேலும் வேறு என்னென்ன தேவைப்படுகிறது என விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் செய்திகள்