பணகுடியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

பணகுடியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2021-05-30 19:05 GMT
பணகுடி:
பணகுடியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கணவருடன் தகராறு

நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் கோகிலா தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி கணவருடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் கோகிலா இருந்து வந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிைலயில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகிலா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீைர ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் உடல் கருகிய கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சிங் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  கோகிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதிக் தயாள் விசாரணை நடத்தி வருகிறார். 

பணகுடியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்