கல்லல் அருகே புரண்டி மணிமுத்தாறில் மணல் அள்ளுவதாக தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பானுப்பிரியா போலீசாருடன் அங்கு சென்றார். அப்போது மணல் கடத்தியவர்கள் மினிலாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். லாரியில் மணல் சாக்குபையில் மூைட, மூடையாக கட்டி இருந்தனர். இதையடுத்து போலீசார் மணலுடன் மினிலாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை கல்லல் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். -------