ஆசைவார்த்தை கூறி மாணவி கடத்தல்: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-30 19:42 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தருவை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 20). டிரைவரான இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவி வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு முரளியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்