52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கல்லலில் ஊரடங்கு விதிமுறை மீறிய 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லல்,
கடந்த 20 நாட்களாக கல்லல் அக்ரஹாரம் இந்திரா நகர், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் அனுமதியின்றி ஊர் சுற்றிய 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.