சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,274 பேர் மீது வழக்கு

1,274 பேர் மீது வழக்கு

Update: 2021-05-30 22:04 GMT
சேலம்:
முழு ஊரடங்கையொட்டி சேலம் மாநகர் பகுதியில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையிலும் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்கள், முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,274 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்