சூதாடிய 6 பேர் கைது

சாயர்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-31 13:13 GMT
சாயர்புரம், ஜூன்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக சாயர்புரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் தலைமையில் போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு விைரந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், செல்வராஜ், ஜெயக்குமார், சந்திரசேகர், மாரி பாண்டி, ஞானதுரை ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.920-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்