பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-05-31 17:41 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற பாலமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

மேலும் செய்திகள்