பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஊரடங்கை மீறியதாக 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஊரடங்கை மீறியதாக 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-31 17:50 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் அறிவுறுத்தலின் பேரில் வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 67 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்