ராமேசுவரம்
ராமேசுவரம் துறைமுக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் துறைமுக பகுதியில் இருந்த ஒரு கடையை சோதனையிட்டனர். அப்போது கடையில் 110 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதை பதுக்கி வைத்திருந்ததாக எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.