100 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் முகாமினை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் வினோத்குமார் செய்திருந்தார்.