ஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

ஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-31 23:03 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

மேலும் செய்திகள்