நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த சின்னநூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 28). இவர் தனது வீட்டின் அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அதியமான்கோட்டை போலீசார் மது பதுக்கி விற்ற சின்னசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
=======